ஊரடங்கு தளர்வுகளால் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

May 25 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு தளர்வுகளால் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநிலத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 6 ஆயிரத்து 540 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், அதேநேரம் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவை இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் திரு.கெஜ்ரிவால் தெரிவித்தார். தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை அலட்சியப்படுத்தாமல், கொரோனா மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பது தனியார் மருத்துவமனைகளின் கடமை என தெரிவித்தார். டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்றும் திரு.கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00