நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை
May 25 2020 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் அனல்காற்று காரணமாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் அனல்காற்று வீசி வருகிறது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. எனவே அனல்காற்று அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 தினங்களில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிழக்கு உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 28ம் தேதிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.