புதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
May 25 2020 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு, அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில், வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் 5 காசுகள் உயர்த்தப்படுகிறது. வர்த்தக உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 5 காசு முதல் 30 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக யூனியன் பிரதேசங்களுக்கான மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த உயர்வு அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும், உடனடியாக மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.