இந்தியாவில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று - 4 ஆயிரத்து 39 பேர் உயிரிழப்பு
May 25 2020 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 911 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 154 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்ட்ரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 50 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 277 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 14 ஆயிரத்து 63 பேருக்கும், டெல்லியில் 14 ஆயிரத்து 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.