மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்
May 25 2020 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, கொரோனா பாதிப்பால் நெருக்கடியில் தவிக்கும் மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனாவின் தாக்கத்தில் அதிகம் பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்து 635-ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மகாராஷ்டிர அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது கேரளாவின் உதவியை நாடியிருக்கிறது. தங்கள் மாநிலத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்களை அனுப்பி வைக்குமாறு மகராஷ்ரா அரசு, கேரளாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.