புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு
May 24 2020 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் நாளைமுதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், புதுச்சேரியில் நாளைமுதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அமைச்சர் திரு.நமச்சிவாயம் அறிவித்துள்ளார். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்றும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், புதுச்சேரியில் மதுபானங்கள் வாங்க அனுமதியில்லை என்றும் கூறியுள்ளார். மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் அமைச்சர் திரு.நமச்சிவாயம் தெரிவித்தார்.