புலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு
May 24 2020 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு என்றும், நீண்டகாலமாக ஆட்சி செய்த அந்த கட்சி, தொழிலாளர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இந்த நிலைக்கு, காங்கிரசே பொறுப்பு என்றும் செல்வி மாயாவதி விமர்சித்துள்ளார். சுதந்திரம் அடைந்த பிறகு, மத்தியிலும், மாநிலங்களிலும் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான் என்றும், அப்போதே, தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களிலும், நகரங்களிலும் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடுகள் செய்திருந்தால், அவர்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள் என்றும் மாயாவதி கூறியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசும் வீடியோக்களில், அனுதாபம் தெரியவில்லை என்றும், நாடகமே தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.