காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்திவைத்த படகுகளில் இருந்து டீசல் திருட்டு : ஒருவர் கைது
Apr 9 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆயிரம் லிட்டர் டீசல் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதகடி அருகே வீட்டில் அதிக அளவு டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சோதனை செய்த போலீசார், கேன்களில் ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சூரியகாந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். டீசல் திருட்டு தொடர்பாக மேலும் நால்வரை தேடி வருகின்றனர்.