கொரோனாவால் இந்தியர்கள் வறுமையால் பாதிக்கக்கூடும் -ஐ.நா எச்சரிக்கை
Apr 9 2020 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் வறுமை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 40 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்க உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி பிரேசில், நைஜீரியா போன்ற நாடுகளில் முறைசாரா பணிகளை செய்து வரும் 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையால் பாதிக்கப்பட உள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.