வெளிநாடுவாழ் மலையாளிகளுக்காக சிறப்பு மருத்துவ ஏற்பாடு - ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க நடவடிக்கை : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
Apr 9 2020 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதைத் தடுக்க, ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இதுவரை 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 259 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள், கொரோனாவால் உயிரிழப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ உதவிகள் வழங்க, ஐந்து மையங்கள் திறக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். கேரளாவில் உள்ள மருத்துவர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவர் என்றும், குறிப்பாக, காணொலி காட்சி மூலம் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டார். இதற்காக, https://norkaroots.org/web/guest என்ற இணையத்தை அணுகலாம் எனவும் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.