அக்டோபர் மாதம்வரை ஓட்டல்கள் மூடப்படும் என பரவும் செய்தி வெறும் வதந்தி என மத்திய அரசு விளக்கம்
Apr 9 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உணவகங்களும், தங்கும் விடுதிகளும் வரும் அக்டோபர் மாதம் வரை மூடப்படும் என்று பரவும் செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது.
தேசிய ஊரடங்கு நேரத்தில், உணவகங்களில் பார்சல்கள் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படாலம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந் நிலையில், வரும் அக்டோபர் மாதம்வரை உணவகங்களையும், தங்கும் விடுதிகளையும் திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசு கூறியுள்ளது. அதுபோன்ற உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் ஓட்டல்களில் பணிபுரியும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிகளை இழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.