சர்வதேச நாடுகளின் 70 சதவீத ஹைட்ராக்சி குளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது - இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு தகவல்
Apr 9 2020 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச நாடுகளின் 70 சதவீத ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து முக்கிய பங்காற்றுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ள நிலையில், அமெரிக்கா நடத்திய ஆய்விலும் அது நிரூபணம் ஆகியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரணத்தில் இருந்து காக்க இந்த மருந்து உதவுவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் தயாரிப்பில் இந்தியா சர்வதேச அளவில் முன்னணி இடம் வகிப்பதாகவும், சர்வதேச நாடுகளின் 70 சதவீத ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாகவும் இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹைட்ராக்சிகுளோராகுயின் உள்ளிட்ட மருந்துகளுக்கு உள்நாட்டில் அதிகம் தேவை உள்ள சூழலில், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தவறு என சிலர் கூறிவரும் நிலையில், ஹைராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பு உள்ளதாக பல்வேறு மாநிலங்களும் தெரிவித்துள்ளன.