சிறு, குறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு ஆலோசனை : 2-வது நிதி தொகுப்பு வெளியாகலாம் என தகவல்
Apr 9 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறு, குறு வணிகர்கள் பயனடையும் வகையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாவது நிதி தொகுப்பை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட போது, மக்களின் பொருளாதார பாதிப்பை குறைக்கும் வகையில், பொருளாதார ஊக்கத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இது போதுமானதாக இல்லை என்பதால், இரண்டாம் நிதி தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இரண்டாவது நிதி தொகுப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தேசிய ஊரடங்கால் வர்த்தகர்கள் சந்திக்கும் இழப்பீட்டின் அளவை மதிப்பிட்ட பின்னர், பெரிய நிறுவனங்களுக்கு தனி நிதி தொகுப்பையும், சிறு, குறு நிறுவனங்களுக்கு தனி நிதி தொகுப்பையும் அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.