கொரோனா அச்சம் - சாலைகளில் ஆங்காங்கே நிற்கும் சரக்கு லாரிகள் : தேசிய ஊரடங்கால் முடங்கிய ரூ. 35,000 கோடி மதிப்புள்ள சரக்குகள்
Apr 9 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சத்தால் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சரக்குகளுடன் சுமார் மூன்றரை லட்சம் சரக்கு லாரிகள் நாடு முழுவதும் சாலைகளில் முடங்கியுள்ளன.
தேசிய ஊரடங்கால் மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, காய்கறி, எண்ணெய், பெட்ரோல், குடிநீர், மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தடையில்லை என்ற போதிலும், இதரப் பொருட்களை கொண்ட சென்ற சரக்கு வாகனங்கள் பல்வேறு நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சரக்குகளுடன் சுமார் மூன்றரை லட்சம் சரக்கு லாரிகள் சாலைகளில் முடங்கியுள்ளன. லாரிகளில் உள்ள பொருட்கள் சேதம் அடையவும், களவு போகவும் வாய்ப்புள்ளதால், அவற்றை இரவும் பகலும் கண்காணிக்கும் பணியில் ஓட்டுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து வகையான சரக்கு போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.