ஒடிஷாவில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - ஜுன் மாதம் 17ம் தேதி வரை கல்வி நிலையங்களை மூட முதலமைச்சர் நவின் பட்நாயக் உத்தரவு
Apr 9 2020 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒடிசாவில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஜுன் மாதம் 17ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். வரும் 30ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவையை தொடங்க அனுமதிக்க வேண்டாம் என்றும் மத்திய அரசை திரு.நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். ஒடிசாவில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.