கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதன்முறையாக மத்தியப்பிரதேச மருத்துவர் உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
Apr 9 2020 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிலேயேமுதன்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.
மத்தியப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்தூரில் உள்ள M.G.M. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மருத்துவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், நாட்டிலேயே முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.