வங்கி இ.எம்.ஐ செலுத்துவதை தள்ளிப்போட ஓ.டி.பி கேட்டு மோசடி : மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை
Apr 9 2020 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கி இ.எம்.ஐ செலுத்துவதை தள்ளிப்போடுவதற்காக ஓ.டி.பி கேட்டு சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய் செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP எண்ணை கேட்டு நடைபெறும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்த தனிப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு ஓடிபி-ஐ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.