நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தலாம் : பிரதமர் மோதிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் யோசனை
Apr 9 2020 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று என்று பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார் யோசனை தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோதி, அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் ஆலோசனையில், கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.சரத்பவார், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மாநிலங்களின் வருவாயை அதிகரிக்க ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா தொடர்பாக எந்தவொரு சமூகத்தை குறைகூறுவதோ அல்லது நோயை பரப்புவதாக குற்றம் சாட்டுவதோ சரியானது அல்ல என தெரிவித்த திரு. சரத்பவார், தற்போதைய சூழலில் நோய் பரவுவதை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.