தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்குவதற்கு சாத்தியமில்லை : பிரதமர் நரேந்திர மோதி
Apr 9 2020 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்குவதற்கு சாத்தியமில்லை என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், பிரதமர் திரு. நரேந்திர மோதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை தளர்த்துவதா, நீட்டிப்பதா? கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், அதிலிருந்து மீளும் வழிகள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள், நிபுணர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு உயிரையும் காப்பதே அரசின் பிரதான நோக்கம் என்று கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்க சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும்,
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் திரு. நரேந்திர மோதி வரும் 11-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.