நாடு முழுவதும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கு ஒருபோதும் தட்டுப்பாடு ஏற்படாது - மத்திய சுகாதாரத்துறை திட்டவட்டம்
Apr 8 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கு எப்போதுமே இந்தியாவில் தட்டுப்பாடு இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை பிரத்யேக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் HCQ எனப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த மருந்தை இந்தியா எந்த நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யாது என கூறப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு.லாவ் அகர்வால், குளோரோகுயின் மருந்துக்கு இப்போதுமட்டுமல்ல, எப்போதுமே இந்தியாவில் தட்டுப்பாடு வராது என உறுதிபட கூறியுள்ளார்.