நாசித்துவாரங்கள் வழியாக கொரோனா வைரஸ் நுழையாமல் இருக்க ஜெல் : மும்பை ஐஐடி உருவாக்கம்
Apr 8 2020 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் நாசித்துவாரங்களின் வழியே அதிகம் பரவுவதால், அதனை தடுக்கும் வகையில் நாசித்துவாரங்களில் பூசிக்கொள்ளும் "ஜெல்" ஒன்றை ஐ.ஐ.டி. உருவாக்கவுள்ளது.
கொரோனோ வைரஸ் உடலில் நாசித் துவாரங்கள் வழியாக அதிக அளவில் நுழையும் என்பதால், அப்பகுதியில் பூசுவதற்கான ஜெல் ஒன்றை தயாரிக்க மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டபூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஆதரவு அளித்துள்ளது. மேலும் இதற்கான நிதியை ஒதுக்கவும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் ஜெல் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு உதவுவதுடன், வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறுவதையும் பெருமளவுக்குக் குறையும் எனவும் கூறப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுடன் இது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.