மும்பையில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் - கொரோனா தடுப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
Apr 8 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனைவரும் கட்டாயம் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதில், மும்பையில் மட்டும் 642 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.