முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்
Apr 8 2020 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களின் தேவை அதிகரித்ததால், மருத்துவ கவுன்சில் இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிக்காலத்தை நீட்டிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.