நாள்தோறும் ஆயிரம் பாதுகாப்பு கவச உடைகளை உற்பத்தி செய்து வழங்க ரயில்வே வாரியம் முடிவு
Apr 8 2020 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாடெங்கிலும் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க ரயில்வே வாரியம், தனிநபர் பாதுகாப்பு கவச உடைகளை தயார் செய்து வருகிறது. தற்போது நாள்தோறும் ஆயிரம் தனிநபர் பாதுகாப்பு கவச உடைகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிடம் ரயில்வே துறை இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேக்குச் சொந்தமான 17 பணிமனைகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.