ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மலையாள திரைப்படக்குழுவினர் : நடிகர் பிரித்விராஜ் குறித்து அவரது மனைவி உருக்கமான பதிவு

Apr 8 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மலையாள நடிகர் பிரித்விராஜ் விரைவில் தாயகம் திரும்ப வேண்டி அவரது மனைவி உருக்கமாக பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் தயாராகி வரும் ஆடுஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டிற்கு சென்ற நடிகர் திரு. பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், கொரோனா ஊரடங்கால் பாலைவனத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை இந்திய அரசு மூலம் அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர் தங்களது நிலை குறித்தும், உணவு கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதாகவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டார் நடிகர் பிரித்விராஜ். அதனையடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு ஆறுதல் கூறியிருந்தனர். தற்போது அவரது மனைவி சுப்ரியா, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மரணம் மற்றும் கொடிய உயிர்கொல்லி வைரஸ் பற்றிய செய்திகள் வெளியாகும் சிக்கலான நேரத்தில் இரட்டை வானவில் தனது கணவர் வருவதற்கான அடையாளமாக நம்பிக்கை தருகிறது என குறிப்பிட்டுள்ளார். பிரித்விராஜ் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00