கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு - பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய அரசு பதில்

Apr 8 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரிசோதனையை நாடு முழுவதும் இலவசமாக மேற்கொள்ள உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை கூடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 4500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செஷாங் தியோ சுதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா பரிசோதனைக்கு 4500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் இந்த கட்டணத்தில் பரிசோதனை செய்து கொள்வது சாத்தியமில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும், அனைத்து மக்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் ஸெஷாங் தியோ சுதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00