கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பார்க்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவசியம் - பாதுகாப்பு அளிக்கக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
Apr 8 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பாதுகாப்பு உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள் அச்சத்துடனும், கலக்கத்துடனும் இருப்பதாகவும்,
அவர்கள் சிகிச்சை அளிக்க முன் வராவிட்டால் மிகப் பெரும் விளைவுகள் ஏற்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பின்னர், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் சம்பள பிடித்தம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவதாக வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசு நீதிபதி, அவ்வாறு வெளியாகும் தகவல் தவறானது என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.