குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஊதியத்திலிருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் - மத்திய அரசு தகவல்
Apr 6 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், கொரோனா எதிரொலியாக குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தார். ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் எனவும் தெரிவித்த திரு. பிரகாஷ் ஜவடேகர், ஊதியம் பிடிப்பு, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்துவதன் மூலம் 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.