நாட்டின் மிகப்பெரிய நாசிக் வெங்காய சந்தையையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் - நோய் தொற்று உறுதி என அறிவிக்கப்பட்டதால் வெங்காய மூட்டைகளை கொண்டு செல்ல தடை
Apr 6 2020 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் மார்க்கெட்டில், கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெங்காய மூட்டைகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக விளங்கும் நாசிக் சந்தைக்குள்ளும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இப்பகுதிக்கு ரொட்டி சப்ளை செய்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாசிக் சந்தையிலிருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் வெங்காய மூட்டைகள் மீது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
நாசிக் சந்தையிலிருந்து வெங்காய மூட்டைகளை கொண்டு செல்வதற்கும், சந்தைக்குள் இருப்பவர்கள் வெளியே செல்வதற்கும், வெளியே இருப்பவர்கள் சந்தைக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.