கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பாடகி கனிகா கபூர் - பூரண குணமடைந்ததையடுத்து கனிகா வீடு திரும்பினார்
Apr 6 2020 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் பின்னணி பாடகி கனிகா கபூர், பூரண குணமடைந்ததை அடுத்து, வீடு திரும்பினார். கடந்த மாதம் 9-ம் தேதி லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய கனிகா கபூர், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். கனிகா கபூருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பூரண குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.