கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்கும் என ஐ.எம்.எஃப். தகவல்
Mar 28 2020 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசால் உலக பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், 2009-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட இது மிக மோசமானதாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜியா, கொரோனாவின் பாதிப்பு, உலக பொருளாதாரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில், கொரோனா, மோசமான பாதிப்பை எற்படுத்தியுள்ளதால், அதிலிருந்து அந்நாடுகளை மீட்பதற்கு பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் என்றும் கூறினார். மேலும் இது, 2009ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.