இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு
Mar 28 2020 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள ஐ.டி. ஊழியர்கள், அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், cognizant நிறுவனம், இவ்விரு நாடுகளில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க முன்வந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால், உலகமே முடங்கியுள்ள சூழலில், வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைவரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருவதால் ஐ.டி. ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளதால், இந்நாடுகளில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பிரபல ஐ.டி. நிறுவனமான cognizant, இவ்விரு நாடுகளில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்நாடுகளில் பணி புரியும் மூன்றில் இரு பங்கு ஊழியர்கள் அதிக நேரம் பணி புரிவதால் அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 25 சதவீத தொகை கூடுதல் ஊதியமாக அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இ-மெயில் மூலம் தெரிவித்துள்ள நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரியான் ஹம்ப்ரீஸ், நிறுவன ஊழியர்களை பாராட்டி உள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களில் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு, மாதம் இருமுறை ஊதியம் வழங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.