கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்கு செல்லும் இந்தியா - சந்திக்க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
Mar 28 2020 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சமூக பரவல் எனப்படும் 3-ம் நிலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
4 கட்டங்கள் கொண்ட கொரோனா பரவலில், முதல் கட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும், இரண்டாவது கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் பரவுகிறது. மூன்றாவது கட்டத்தில், வெளிநாடு செல்லாதவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். மிகவும் அபாயகரமான இந்த கட்டத்தில்தான் இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளன.
இந்தியாவில், கொரோனா பாதிப்பு, சமூக பரவல் எனப்படும் 3-ம் நிலைக்கு செல்லவில்லை என்ற போதிலும், அந்த நிலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலில், 2-ம் கட்டத்திற்கும், 3-ம் கட்டத்திற்கும் இடையில் இந்தியா இருப்பதாலும், அதிகரித்துவரும் பாதிப்பு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.