டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது : மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்
Feb 28 2020 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இயல்பு நிலை திரும்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரு. ராஜ்நாத் சிங்கிடம், டெல்லி கலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திரு. ராஜ்நாத் சிங், 'டெல்லியில் இயல்பு நிலை திரும்புவதாக கூறினார். வன்முறை ஏற்பட்ட பகுதிகளில், ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் திரு. கெஜ்ரிவால் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.