பிரதமர் மோதி - மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் சந்திப்பு : மாநில வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்

Feb 21 2020 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், பிரதமர் திரு. நரேந்திர மோதியை, மஹாராஷ்டிர முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மத்திய பா.ஜ.க., அரசின் குடியுரி‌மை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றில், கூட்டணி கட்சிகளுக்கும், சிவசேனாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. தேசிய குடிமக்கள் ப‌திவேட்டை மட்டும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று, முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், டெல்லியில், பிரதமர் திரு. நரேந்திர மோதியை, முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன், அவரது மகனும், மஹாராஷ்டிர அமைச்சருமான திரு. ஆதித்ய தாக்கரேவும் உடனிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00