காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Feb 21 2020 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், இந்திய உணவுக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்திய உணவுக் கழகமும், கூட்டுறவு பண்டக சாலையும் இணைந்து, காரைக்கால் அடுத்துள்ள தென்னங்குடியில், நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு.அர்ஜுன் சர்மா திறந்து வைத்தார். காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.