அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இந்தியா வருகை தரும் அந்நாட்டு உயர்மட்ட குழுவில், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
டிரம்பின் இந்திய வருகை குறித்து வெளியுறவுத்துறை வெளியிடுள்ள தகவலில், அமெரிக்கா-இந்தியா இரு தரப்பு பேச்சுவார்த்தையில், அமெரிக்கா உதவியுடன் இந்தியாவில் அமையவிருக்கும் அணு உலைகளுக்கான ஒப்பந்தம், உள்நாட்டு பாதுகாப்பு உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-ம் தேதி பிற்பகலில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்திற்கு வருகை தரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து மொட்டேரா மைதானத்திற்கு செல்லும் வரை, வழி நெடுகிலும் 28 மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் 10 மில்லியன் மக்கள் கலந்து கொள்கின்றனர்.
அஹமதாபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மாலை 3.30 மணிக்கு, தன்னுடைய மனைவியுடன், டிரம்ப், ஆக்ரா வருகை தருகிறார். ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் டெல்லி திரும்பும் அவர், இந்தியா - அமெரிக்கா வர்த்தக கூட்டத்தில் பங்கேற்கிறார்.
25-ம் தேதி காலை, குடியரசுத் தலைவர் மாளிகையில், டிரம்புக்கு, வழக்கமான அரசுமுறை சம்பிரதாயங்களுடன் வரவேற்பும், முப்படைகளின் மரியாதையும் அளிக்கப்படுகிறது. பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து பிரதமர் மோதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஹைதராபாத் ஹவுசில், இரு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.
இரு தரப்பு பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஹைதராபாத் ஹவுஸிலேயே பிரதமர் மோதி, டிரம்புக்கு பகல் விருந்து அளிக்கிறார். இரவு, குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது. இரவு 10 மணி அளவில், இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு, டிரம்ப், ஜெர்மனி புறப்படுகிறார்.
டொனால்டு டிரம்புடன் இந்தியா வருகை தரும் அமெரிக்க உயர்மட்ட குழுவில், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜெராட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.