டெல்லியில், 39 ஏக்கர் பரப்பளவில், இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமையகம் - அடிக்கல் நாட்டுவிழாவில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு
Feb 21 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், சுமார் 39 ஏக்கர் பரப்பளவில், இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமையகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.
டெல்லியின் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவத்திற்கான புதிய தலைமையகம் கட்டப்படவுள்ளது. 'தால் சேனா பவன்' என பெயரிடப்பட்டுள்ள கட்டடத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று அடிக்கல் நாட்டினார். அலுவலகம் கட்டடம், வாகன நிறுத்துமிடம் என சுமார் ஏழரை லட்சம் சதுர மீட்டரில் ராணுவ தலைமையகம் அமையவுள்ளது.
6 ஆயிரத்து 14 அலுவலக அறைகள், ஆயிரத்து 684 அலுவலர்களுக்கான வீடுகள், ஆகியவையும் ராணுவ வளாகத்தில் அமையவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள், ராணுவ தலைமையக கட்டடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.