குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்
Feb 21 2020 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, நாட்டின் முக்கிய தலைவர்கள் வெளியிட்ட 65 வெறுக்கத்தக்க பேச்சுகளில், 61 பேச்சுகள் பா.ஜ.க. தலைவர்களால் பேசப்பட்டவை என செய்தி நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்களும் அடங்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை, அவர்கள் ஆடைகளை வைத்தே கண்டறிய முடியும் என பிரதமர் மோதி பேசியிருந்தார். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, ஷாகின்பக் போராட்டக்காரர்களுக்கு ஓட்டுகளின் மூலம் "கரண்ட் ஷாக்" கொடுக்க வேண்டும் என பேசியிருந்தார். இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் "போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள வேண்டும்" என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது குறிப்பிடத்தக்கது.