சிறையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட நிர்பயா வழக்கு தூக்குத்தண்டனை கைதி வினய் ஷர்மா - சிறை நிர்வாகம் தகவல் : தூக்குதண்டனையை மேலும் தாமதப்படுத்த முயற்சியா?
Feb 20 2020 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் ஷர்மா, சிறையில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாக, திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதி, சிறைச்சுவற்றில் தனது தலையை மோதி, வினய்ஷர்மா காயப்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார். இதில், அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் 3-ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. தூக்குத்தண்டனையை நிறைவேற்றும்போது உடலில் காயங்கள் இருக்கக்கூடாது என்பதால், தண்டனையை மேலும் தாமதப்படுத்தும் முயற்சியாக வினய் ஷர்மா தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார்.