டெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
Feb 20 2020 10:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அம்மாநில முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 24 ஆம் தேதி தொடங்கும் என திரு. அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்தபேரவைக்கூட்டம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.