வரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
Feb 19 2020 8:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து, பெட்ரோல் மற்றும் டீசல் யூரோ - சிக்ஸ் ரகமாக மாற்றப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது Euro-Four ரக பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது. எரிபொருளில் உள்ள கந்தகத்தைன் அளவை வைத்தே அதன் தூய்மை மதிப்பிடப்படுகிறது. Euro-Four ரக பெட்ரோலில் உள்ள கந்தகத்தின் அளவு 50 PPM ஆகும். காற்று மாசுபடுதலை குறைக்க டெல்லியில் கடந்த ஆண்டிலிருந்தே Euro-Six ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் Euro-Six ரக எரிபொருளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் கந்தக அளவு 10 PPM ஆகும். இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் திரு.சஞ்சிவ் சிங் கூறும்போது, மூன்றே ஆண்டுகளில் பிஎஸ்-4 ரக எரிபொருலிருந்து, பிஎஸ்-6 ரக எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எந்த விதமான இடையூறும் இன்றி நாடு முழுவதும் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் கிடைக்கும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தலைவர் தெரிவித்துள்ளார்.