டெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமனம்
Feb 19 2020 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி ஒருவரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லி ஷாகின்பாக் பகுதியில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோர் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெக்டேவின் உதவியாளராக வழக்கறிஞர் சாதனா ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சஞ்சய் ஹெக்டேவும், சாதனா ரவிச்சந்திரனும், போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.