அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர் : டிரம்ப்பை சந்திக்க ஆவல் - மத்திய அரசிடம் கோரிக்கை
Feb 19 2020 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் தெலங்கானா இளைஞர் ஒருவர், இந்தியாவுக்கு வருகைதரும் டிரம்பை சந்திக்க தனக்கு வாய்ப்பளிக்கும்படி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞர், அதிபர் டிரம்ப் மீது கொண்ட தீவிர பற்று காரணமாக, தன் வீட்டிலேயே அவருக்கு சிலை வைத்து வழிபாடுகள் நடத்தி வருகிறார். அதிபர் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வர இருக்கிறார். இந்த நிலையில், டிரம்பை சந்திக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், அதை நனவாக்க அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.