ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு திட்டம் : சட்ட அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க மத்திய அரசு முடிவு
Feb 19 2020 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போலி வாக்காளர்களை நீக்குவதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு, சட்டப்பூர்வமான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.