வளா்ச்சித் திட்டப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு : ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Feb 19 2020 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வளா்ச்சித் திட்டப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது தொடர்பான பிரச்னையில் இருதரப்புக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அண்மையில் மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆரோ காலனியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக எழுந்த பிரச்னை, கடலோர சாலைத் திட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.