சீனாவிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை : 400-க்கும் மேற்பட்டோர் இல்லங்களுக்கு அனுப்பிவைப்பு
Feb 18 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் அச்சத்தால், சீனாவிலிருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட, 220 பேர், இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் கடந்த ஒன்றாம் தேதி, தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான சிறப்பு முகாமை, டெல்லி அருகே உள்ள மனேசாரில் ராணுவம் அமைத்தது. ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் தாயகம் அழைத்து வரப்பட்டவர்கள், இந்த முகாமில் 14 நாட்கள் வைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்காணிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முகாமில் கண்காணிக்கப்பட்ட வந்த 400-க்கும் மேற்பட்டவர்களில், 200 பேர், நேற்று, அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 220 பேர் இன்று இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். முகாமில் தங்கவைக்கப்பட்ட யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.