கடந்த ஆண்டில் ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணம் - 4 லட்சம் பேருக்கு ரூ.16 கோடி அபராதம்
Feb 18 2020 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த ஆண்டில் ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணித்த 4 லட்சம் பேருக்கு 16 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு பாதுகாப்புப் படை வீரா்கள் உதவியுடன் ரயில்வே வா்த்தகப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின்போது, பயணச்சீட்டின்றி பயணம் செய்த 4 லட்சத்து 2 ஆயிரத்து 760 பேர் பிடிப்பட்டனா். அவா்களிடம் இருந்து 16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தவர்களிடமும் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.