கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக இந்தியாவில் கோழிக்கறி விற்பனை பாதிப்பு - ஆயிரத்து 310 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்
Feb 18 2020 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோழிக்கறி வழியாக கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணைத் தொழில் சுமார் ஆயிரத்து 310 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இந்தியாவில், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகினர். இந்நிலையில், கறிக்கோழி வழியாக கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணைத் தொழில், சுமார் ஆயிரத்து 310 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மஹாராஷ்டிராவில் கடந்த மாதம் சராசரியாக 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழியின் பண்ணை விலை, கொரோனா புரளியை தொடர்ந்து, கிலோவுக்கு 35 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு தினமும் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மஹாராஷ்ட்ர கோழிப்பண்ணையாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் கணக்கிடும் போது இந்த இழப்பு பலமடங்காக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோழி விற்பனை இதே நிலையில் தொடர்ந்தால், பண்ணையாளர்கள் தங்களது உற்பத்தியை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதுடன், வரும் ஏப்ரல் மாதம் முதல் கறிக்கோழி விலை அதிகரிக்கும் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.