ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை பணி தொடக்கம் : 4 மாதங்களில் பணி முடிவடைந்த பின்னர் சட்டசபை தேர்தல்
Feb 18 2020 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, புதிய சட்டசபை தொகுதிகள் எல்லை வரையறை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு பணி தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் மாற்றப்பட்டு, துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் படி, தொகுதி மறுவரையறை செய்யும் பணி தொடங்கியுள்ளது. தொகுதி மறுவரையரை செய்யும் பணி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், 4 மாதங்களில் பணி முடிவடையும் என்றும், அதற்கு பின்னர், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.